<<>>கதைப்பூங்கா....!<<>>
" முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்..! "
மணி வகுப்பில், முதல் மாணவன். பாடத்தில் மட்டுமல்ல; பேச்சு, கட்டுரை, விளையாட்டுஎல்லாத்துலயும் முதல் மாணவன். பாராட்டும், பரிசுகளும் மணியைத் தேடி வந்தன.ரமணி வகுப்பில் படிக்கும் சக மாணவனான மதிவாணனுக்கு படிப்பதில் நாட்டமில்லாமல்விளையாட்டிலேயே பொழுதைப் போக்குவான். னாலும் ரமணி பரிசோ, பாராட்டோபெறும்போது மதிக்கு கொஞ்சம் பொறாமையா ருக்கும். அவனை எதிலாவதுவீழ்த்திக் காட்டிட சந்தர்ப்பம் வாய்க்காதா என்று காத்திருந்தான்.
அது நேர்வழியில்லாமல் குறுக்குவழியாக ருந்தது. பாடங்களில் ரமணியை விடஅதிக மார்க் வாங்க வேண்டும் என்று எண்ணாமல், ரமணிக்கு குறைவான மார்க்கிடைக்க என்ன செய்வது என்றுதான் சிந்திப்பான் மதி.
மதியோ வசதியான வீட்டுப் பையன். ரமணிக்கு அம்மா கிடையாது. அப்பா மட்டும்தான். பல நேரங்களில் சாப்பிட காலையில் ஒன்றுமிருக்காது. எப்படியிருந்தாலும், எதையும் வெளிக்காட்டாமல் படிப்பில் மட்டுமே தன் முழுக் கவனத்தையும் செலுத்தினான்.
அன்று பள்ளிக்கு கட்டணம் செலுத்தவேண்டிய கடைசி நாள்! ரமணியின் அப்பா,யாரிடமாவது கைமாத்தா பணம் வாங்கீட்டு வர்றேன்னு போனவரைக் காணாமல்ரமணி தவித்துக் கொண்டிருந்தான். பள்ளிக்கு வேறு நேரம் கிக் கொண்டிருந்தது.
ஒருவழியா வந்து பணத்தைக் கொடுத்தார். அதை வாங்கிக் கொண்டு ஓட்டமும்நடையுமாக பள்ளியை நோக்கி போய்க்கொண்டிருந்தான். திடீர்ணு பின்பக்கம்எதோ வந்து மோத ரமணி தலைகுப்புற வீழ்ந்தான். அவன் புத்தகப் பை ஒரு பக்கமும்வன் ஒரு பக்கமுமாக விழுந்து கிடக்க, " ஸாரிடா... என்றவாறு மதிவாணன் வந்து ரமணியைத் தூக்கிவிட்டான்.
மதி வேண்டுமென்றே சைக்கிளை அவன் மீது மோதிவிட்டு தெரியாமல் நடந்தது போல மன்னிப்புக் கேட்டுக்கொண்டான். ரமணிக்குத்தான் கை, கால், நெற்றியில் காயம் பட்டு ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.
சிதறிக்கிடந்த புத்தகங்களையும் நோட்டுக்களையும் எடுத்து பைக்குள் திணித்துக்கொண்டு பள்ளிக்கு நேரமாச்சே என்ற உணர்வு உந்தித் தள்ள ஓடினான். நல்லவேளையாக சிரியர் வகுப்பிற்கு வரும் முன் அவன் டத்தில் போய்அமர்ந்து விட்டான்.வகுப்பாசிரியர் வந்து வருகைப் பதிவேடு சரி பார்த்ததும் முதல் கேள்வியாக,என்ன ரமணி பணம் கொண்டு வந்தியா ? என்றுதான் கேட்டார். கொண்டுவந்திருக்கிறேன் அய்யா, என்று சொல்லிக்கொண்டே சட்டைப்பையில்கையை விட்டவன் தேள் கொட்டியது போல் துடித்துப் போனான்.
பையில்பணம் ல்லை. தேம்பித்தேம்பி அழ ரம்பித்துவிட்டான். சிரியர் அவனைசமாதானப்படுத்துவதற்குள் போதும்போதும் என்றாகிவிட்டது. ரமணிக்காகசிரியரே கட்டணத்தையும் செலுத்திவிட்டார்.
விழுந்த டத்தில் பணம் பையிலிருந்து விழுந்திருக்குமோ என்று ரமணி நினைத்துஅங்கெல்லாம் போய் தேடிப் பார்த்தான்.
னால் மதிவாணன் மட்டும் தனக்குள்சிரித்துக்கொண்டிருந்தான்.ரமணி மாலையில் வீட்டில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில்அவன் அப்பாவும் வந்துவிட்டார். ரமணி காலையில் பணம் தொலைந்து போனதைச்சொல்லி அழுதான். அந்தப்பணம் அப்படி
போகணும்னு ருக்குறப்போ நீ என்னசெய்ய முடியும் என்று சொல்லி அவனைத் தேற்றினார். சரி, நீ முகத்தைக் கழுவீட்டு கடைக்குப் போய் துல எழுதியிருக்கிறதெல்லாம்வாங்கீட்டு வா என்று அவனை கடைக்கு அனுப்பினார்.
கடைவீதிக்கு வந்த ரமணி ஒரு டத்தில் கூட்டமாக மக்கள் கூடி நிற்பதையும்,து யார் பெத்த பிள்ளையோ, அப்டீன்னு யாரோ சொல்வதும் காதில் விழுந்தது.கூட்டத்தை விலக்கிப் போய் ரமணி பார்த்தான். அங்கே தலையில் அடிபட்டுரத்தம் வந்துகொண்டிருக்க மதிவாணன் மெல்ல முனங்கிக் கொண்டிருந்தான்.
" ஐயோ ! மதி நீயா? என்று கேட்டவன், அருகே நின்ற சைக்கிள் ரிக்ஷாக்காரரைகூப்பிட்டு, வன் என்னோட படிக்கிறவன். கொஞ்சம் உதவி பண்ணுங்க. ஸ்பத்திரிக்குகொண்டு போக... " என்றான்.
" அட நீவேற ! அடிச்சுத் தள்ளீட்டு நிக்காம எவனோ போயிட்டான்.
போலீஸ் கேஸைநான் தொடமாட்டேம்பா என்றான் ரிக்ஷாக்காரன்.
" ஐயா, சீக்கிரமா ஸ்பத்திரிக்கு கொண்டு போனா காப்பாத்தீரலாம். ஒங்களுக்குரிக்ஷா வாடகைய நானே கொடுத்துர்றேன் என்று சொல்ல அங்கிருந்தவர்கள் சிலர்ரமணிக்கு தரவாகப் பேச அருகிலிருந்த மருத்துவமனையில் கொண்டு போய்மதியைச் சேர்த்தான்.
தீவிர மருத்துவ சிகிச்சைப் பகுதியில் மருத்துவர்கள் சிகிச்சைஅளித்தனர்.
சிறிது நேரம் கழித்து வந்த மருத்துவர் ஒருவர், " தம்பி, சரியான சமயத்துல கொண்டுவந்து சேர்த்தாய். ன்னும் ஒரு ரெண்டு மணி நேரத்துல கண் முழிப்பான். நீ அதற்குள்ளஅவங்க வீட்டுக்குத் தகவல் சொல்லி வரச் சொல்லுன்னார்.
மதிவாணன் அப்பாவும், அம்மாவும் அரக்கப் பரக்க வந்தார்கள். அப்போதுதான் மதிகண்ணைத் திறந்து பார்த்தான். அவன் தலையிலிருந்த கட்டைப் பார்த்து அவனின்அம்மா, மதீன்னு கத்தி அழ ரம்பிச்சுட்டார். அங்கிருந்த மருத்துவரிடம் மதியின்அப்பா, எப்படியோ மகனை காப்பாத்தீட்டீங்க. ஒங்களுக்கு கோடி நன்றிங்க, அப்டீன்னார்.
" ங்க கொண்டுவந்து சரியான சமயத்துல சேர்த்த அந்தப் பையனுக்கு நன்றி சொல்லுங்கமுதல்ல அப்டீன்னு ரமணியை நோக்கி கையைக் காட்டினார், மருத்துவர்.
அப்போதுதான், மதி உட்பட எல்லோருக்கும் விஷயம் புரிந்தது. தம்பி, நீ மகராசனா ருக்கணும்ப்பா,என்று மதியின் அப்பாவும் அம்மாவும் ரமணிக்கு நன்றி சொன்னாங்க. ரமணி , என்னங்கமதிகூடப் படிக்கிறேன், தக்கூட நான் செய்யலையின்னா நான் படிச்சு என்ன புண்ணியம்என்றான்.
மதியின் கண்களிலிருந்து சரம்,சரமாய் கண்ணீர் வடிந்தது. ரமணியின் கைகளைப் பிடித்துக்கொண்டு நீ என்னை மன்னிச்சுரு என்றான் மதி. மன்னிப்பா? எதுக்கு நான் ஒன்னை மன்னிக்கணும்?என்றான் ரமணி.
" நான் எவ்வளவோ கெடுதல் ஒனக்குப் பண்ணீருக்கேன். ன்னைக்கு காலையில கூட உன்னைவேணும்னே சைக்கிள்ல மோதுனேன். உன் பையிலிருந்து கீழ விழுந்த பணத்தைக் கூட நாந்தான்எடுத்தேன்.
னா, நீ என்னை ப்ப சாவுல ருந்து காப்பாத்தீருக்க. என்னை மன்னிச்சு ஒன்னோடநண்பனா ஏத்துப்பியா? என்று கேட்டு மேலும் அழுதான் மதி.
" அட, பைத்தியம் ! நீ எப்பவும் என் நண்பன்தான் ! நீ எப்ப தப்புன்னு உணர்ந்திட்டியோ அப்பறம்என்ன? நீ ப்ப அழக் கூடாது. எங்க சிரி பாக்கலாம் என்றான், ரமணி.
மதிவாணனின் அப்பா, நாளைக்குக் காலையில் ரமணிக்கு ஒரு புது சைக்கிள் வாங்கிக் கொடுக்கப்போறேன், அப்டீன்னார்.
மதிவாணனின் அம்மா, எனக்கு ன்னையிலிருந்து ரெண்டு மகன்கள் என்று சொல்லி ரமணியைகட்டி அணைத்துக்கொண்டார்.
ரமணிக்கு அந்தத் தாயின் அரவணைப்பில்தன் தாயைக் காணும் சுகத்தில் மூழ்கிப் போனான்.
கதை தரும் நீதி : - யாருக்கும் தீங்கு விளைவிக்க மனதால் கூட எண்ணுதல் கூடாது. ஒருவருக்கு காலையில் தீங்கு செய்தால் மாலையில் அவருக்கே தீமை தேடிவரும் ! எனவே நமக்குத் தீங்கு செய்பவர்களுக்குக்கூட நாம் தீங்கு செய்யலாகாது !

0 Comments:
Post a Comment
<< Home