KathaiKathaiyaam

Sunday, November 30, 2008

உணவு மழைத் தீவு :15 :


"இவ‌ர் வ‌ந்து ஒரு செய்தியைச் சொல்கிறார். இந்த‌ நேர‌த்தில் ந‌ம‌க்கு இது ஒரு ந‌ல்ல‌ செய்தியாக‌த்தான் இருக்கிற‌து. ந‌ம் தீவுக்கு கிழ‌க்கே ஒரு க‌ப்ப‌ல் ந‌ங்கூர‌ம் பாய்ச்சி நின்றுகொண்டிருக்கிற‌தாம். என்னுடன் ஓரிருவர் வந்தால் அவர்களிடம் நாம் பறவைத்தீவு போக உத‌வி கேட்டுப்பார்க்கலாம்," என்றார் தீவு நிர்வாக‌ அதிகாரி.
எல்லோரின் முகங்களிலும் பிரகாசமான ஒளி தோன்றியது. அதில் ஒருவர்,"எனது விசைப் படகு க‌ட‌லுக்கு அருகில் தான் இருக்கிற‌து. அதில் உட‌னே போக‌லாம்" என்று சொல்ல‌ உற்சாக‌மாக‌ சில‌ர் தீவு நிர்வாக‌ அதிகாரியுட‌ன் கிள‌ம்பின‌ர்.

ப‌த்துபேர்க‌ளுட‌ன் விசைப்ப‌ட‌கு காற்றைக் கிழித்துக்கொண்டு க‌ட‌லில் விரைந்த‌து. விசைப்ப‌ட‌கின் உச்சியில் வெள்ளைக்கொடி காற்றில் ப‌ட‌ப‌ட‌த்துக்கொண்டிருந்த‌து.


கப்பலில் இருப்பவர்கள் கடற்கொள்ளையர்கள் வருகிறார்கள் என்று நினைத்துவிடக்கூடாது அல்லவா? அதனால்தான் தீவு நிர்வாக அதிகாரி வெள்ளைக்கொடியைப் பறக்க ஏற்பாடு செய்திருந்தார்.
உணவு மழைத் தீவு விசைப்ப‌டகுகள் டீசல், பெட்ரோலில் ஓடுபவை அல்ல; காற்றைச் சுவாசித்து ஓடும் வகையில் தயாரிக்கப்பட்ட நவீனப் படகுகள். டீச‌ல் தீர்ந்துவிட்ட‌து; அத‌னால் ப‌ட‌கு ந‌டுவ‌ழியில் நின்றுவிட்ட‌து என்ற‌ பேச்செல்லாம் இல்லை.
அறிவிய‌ல் வ‌ள‌ர்ச்சியில் எதுதான் சாத்திய‌ம் இல்லை?
க‌ல்லையும் க‌ல்லையும் உர‌சி தீப்பொறி உண்டாக்கிய‌ கால‌த்திலிருந்து எத்த‌னை எத்த‌னை வ‌ள‌ர்ச்சி? விய‌ப்பு.....விய‌ப்பாக‌த்தான் இருக்கிற‌து, ஒவ்வொன்றுமே!
படகு கப்பலை நெருங்க,நெருங்க க‌ப்ப‌ல் சிறிது சிறிதாக‌ பெரிதாகத் தெரிய‌ ஆர‌ம்பித்த‌து. தீவு அதிகாரி க‌ப்ப‌லில் உள்ள‌வ‌ர்களிட‌ம் எப்ப‌டி உத‌வி கேட்ப‌து? ம‌றுத்துவிட்டால‌ என்ன‌ செய்வ‌து? என்ற‌ ஆலோச‌னையில் ஈடுப‌ட்டு இருந்தார்.
தீவில் ஆயிர‌ம் வீடுக‌ள் என்றாலும் குழ‌ந்தைக‌ள் பெரிய‌வ‌ர்க‌ள் எல்லாம் சேர்த்து 4642 பேர்கள் இருக்கிறார்கள் என்று குடியிருப்புப் ப‌ட்டிய‌லைக் காண்பித்தார். ந‌ம்மிட‌ம் இருக்கும் ப‌ட‌குக‌ளோ 24தான்.

அதிக‌ப‌ட்ச‌ம் ப‌ட‌குக்கு 25 பேர்க‌ள் என்றாலும் கூட‌ சுமார் 500பேர்க‌ள் ம‌ட்டுமே போக‌ முடியும். க‌ப்ப‌ல் ச‌ர‌க்குக் க‌ப்ப‌ல் போல‌ இருக்கிற‌து. அப்ப‌டியே ந‌ம் நிலையை எண்ணி ஒத்துக்கொண்டாலும் நாலாயிர‌ம் பேரை ஏற்றிச்செல்ல‌ இய‌லுமா என்று தெரிய‌வில்லை, என்ற‌ நியாய‌மான‌ க‌வ‌லையை வெளிப்ப‌டுத்தினார் தீவு நிர்வாக‌ அதிகாரி.

அதே நேர‌த்தில் க‌ப்ப‌லிலிருந்து ஒலி ஒன்று கேட்க‌வே எல்லோரும் க‌ப்ப‌லைப் பார்க்க‌ க‌ப்ப‌ல் நின்ற‌ இட‌த்திலிருந்து மெல்ல‌ வேக‌ம் எடுத்துக் கிளம்பிய‌து.
எல்லோரும் அதிர்ச்சியோடு க‌ப்ப‌லைப் பார்த்த‌ன‌ர்.
இன்னும்பொழியும்.....!

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது