KathaiKathaiyaam

Sunday, April 26, 2009

உணவு மழைத் தீவு :16:

இப்போது என்ன செய்வது? கண்ணுக்கு எதிரே தெரிந்த நம்பிக்கை இப்படி பொய்த்துப்போனதே என்ற கவலையில் எல்லோரும் ஆழ்ந்தனர். அவர்கள்


முகங்களெல்லாம் வாடிவிட்டது. கண்ணுக்கு எட்டியது க‌ர‌ங்க‌ளுக்கு எட்டாது போய்விட்டதே என்ற கவலை அவர்கள் அனைவரையும் சூழ்ந்தது.



பெருமழை பெய்து ஓய்ந்தவுடன் ஒரு அமைதி இருக்குமே, அதுபோல

அங்கு அமைதி நிலவியிருந்தது. எவரும் பேசவில்லை. என்ன பேசுவது என்றும்

அவர்களுக்குத் தெரியவில்லை.


மவுனம் கலைத்து தீவு நிர்வாகி,அங்கிருந்தவர்களிடம் சொன்னார்.

இப்படி நாம் அலைந்துகொண்டிருப்பதைவிட நம் படகுகளிலேயே

கொஞ்சம் கொஞ்சமாக மக்களை ஏற்றிக்கொண்டு புதிய

இடத்தில் கொண்டுபோய் இறக்கிவிட்டுவிட்டு வந்து திரும்பவும்

மீதமுள்ளவர்களை ஏற்றிக்கொண்டு போவது ஒன்றுதான்

சிறந்ததாகப் படுகிறது என்றார்.

சிரமம் கொஞ்சம் அதிகம் என்றாலும் நமக்கு வேறு வழி இல்லை

என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டார்கள்.



அதுதான் சரி என்று தீவு நிர்வாகியிட‌ம் சொல்லவும் செய்தார்கள்.



அப்போது.....

"அங்க பாருங்க....அங்க பாருங்க..." என்று அங்கிருந்தவர்களில்

ஒருவர் சொல்ல, எல்லோரும் அவர் சுட்டிக்காட்டிய திசையில்

திரும்பிப் பார்த்தனர்.

வேகமெடுத்துச் சென்ற கப்பல் இவர்கள் படகை நோக்கி

வந்துகொண்டிருந்தது.



படகிலிருந்த எல்லோரும் மகிழ்ச்சியால் துள்ளிக்குதித்தனர்.



"நாம் வந்தது வீண் போகவில்லை. இன்னும் சிலநிமிடங்களில்

இங்கு வந்துவிடும் அந்தக் கப்பல்"என்று தீவு நிர்வாகி சொல்லி

முடித்தபோது கப்பல் ஒரு நீண்ட ஒலி எழுப்பி அவர்கள்

படகின் சமீபம் வந்து நங்கூர‌ம் பாய்ச்சி நின்ற‌து.

அப்போது....!




இன்னும் வரும்....

Labels: , , , , ,

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது