KathaiKathaiyaam

Sunday, April 26, 2009

உணவு மழைத் தீவு :17:

கப்பலிலிருந்து ஒரு படகு கடலை நோக்கி இறங்கியது;அதில் நாலைந்துபேர்கள் இருந்தனர்.

படகிலிருந்த அனைவரும் அந்தப் படகையே கண் இமைக்காமல் பார்த்துக்
கொண்டிருந்தனர்.

இவர்கள் படகை ஒட்டி வந்ததும் தீவு நிர்வாகி முன் வந்து அவர்களை
வரவேற்றார். கப்பலின் தலைவன் தன்னையும் தன்னுடன் வந்தவர்களையும் அறிமுகம் செய்து வைத்தார். தீவு நிர்வாகியும் தன்னையும் தன்னுடன் இருந்தவர்களையும் அறிமுகம் செய்தார்.

கப்பல் தலைவர் இப்போது பேசத்துவங்கினார்.

நாங்கள் எங்கள் இலகை நோக்கிக் கிளம்பிய பிறகுதான் உங்கள் படகில் வெள்ளைக்கொடி பறப்பதையும் எங்கள் கப்பலை நோக்கி வருவதையும் பார்த்தோம். அதன் பின்னர்தான் ஒரு வட்டமடித்து திரும்பி வந்தோம்; உடனே கப்பலை திருப்ப முடியாதல்லவா என்றவர், உங்களுக்கு என்ன உதவி தேவை? என்று நேரடியாக விசயத்துக்கு வ‌ந்தார்.

"எங்களுக்கு உதவ வந்தமைக்கு முதலில் எங்கள் தீவு மக்கள் சார்பில்

நன்றியைத் தெரிவித்துக்கொண்டார், தீவு நிர்வாக அதிகாரி.

அதன் பின் மளமளவென்று தங்கள் தீவுப் பிரச்னையையும், தற்போது குடி
புக விரும்பும் தீவுக்கு செல்ல தங்களின் பேருதவியை நாடியே வந்ததாகவும் விபரமாகச் சொல்லி முடித்தார், தீவு நிர்வாக அதிகாரி.

கப்பல் தலைவர், தீவு நிர்வாகி சொல்வதை உள்வாங்கிக்கொண்டு தன்னுடன் வந்த‌ மற்றவர்களை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்தார்.

கப்பல் தலைவர் என்ன முடிவு சொல்லப்போகிறார் என்று வெகு உன்னிப்பாய் கவனித்துகொண்டிருந்தார்கள், உணவுமழைத் தீவைச் சேர்ந்தவர்கள்!

"நீங்கள் சொல்லும் தீவு வழியாகத்தான் எங்கள் கப்பல் பயணம்


செய்கிறது. ஆனால்...." என்று சொல்லி நிறுத்தினார்.

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது