<<>>உணவு மழைத் தீவு! -2.<<>>(சிறுவர் தொடர் கதை )

ஒரு நீண்ட மலை; ஒரு பெரிய பாலைவனம்;
ஒரு குட்டிக் கடல்; அந்தக் குட்டிக் கடலில்,
ஒரு குட்டித் தீவு நகரம்.
அந்தக் குட்டித் தீவுக்கு " உணவு மழைத் தீவு " ன்னு பெயர்.
அந்த நகரத்துக்கு இரண்டே தெரு. ஒரு வரிசைக்கு
500 வீடுகள். ஒவ்வொரு வீட்டுக்கு
முன்னாலும் பெரிய பாத்திரம் இருக்கும்.
வீட்டுக்குப் பின்னால் பூந்தோட்டம் இருக்கும்.
ஒவ்வொரு வீட்டிலும் அவர்களின் செல்லப் பிராணிகளாக
நாயும் பூனையும்!
ஆந்த நகரம் உலகத்துலேயே அதிசயமான நகரமும் கூட;
ஆந்த ஊர்ல யாரும்
வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டியதில்லை.
வீட்டுல சமைக்க வேண்டியதில்லை.
அந்த ஊர்ல இருப்பவங்களுடைய தேவைகளை
வானம் தினமும் மும்மாரி பொழிந்து பூர்த்தி செய்யும்!
காலையில் எல்லோரும் எழுந்ததும் தங்கள் டி.வி. முன்னால்
உட்கார்ந்து வானிலை
நிலவரம் பற்றிய செய்தியைக் கேட்பார்கள். எப்போ இடி இடிக்கும்?
மழை வரும், என்றுஅறிந்துகொள்வதற்காக உட்காருவதில்லை.
காலையில் எந்த நேரத்தில் காபி? எந்த நேரத்தில் சிற்றுண்டி?
மதிய, இரவு உணவு நேரங்கள்பற்றியதாகத்தான் வானிலை
அறிவிப்பாக இருக்கும். வானிலை அறிவிப்புகள் சில நேரங்களில்
மகிழ்ச்சியாகவும், சில நேரங்களில் வருத்தம் தருவதாகவும் இருக்கும்.
தினசரி மக்களின் முக்கிய வேலைகளுள் ஒன்று தான் டி.வி.பார்ப்பது.
வானிலை அறிவிப்பு இப்படித்தான் இருக்கும்.
இன்றைய வானிலை அறிவிப்புகளை வழங்குவது உங்கள்
வானதேவன்! இன்று அதிகாலை சரியாக
5மணிக்கு ஒருமணி வேகத்தில் காற்று இல்லாமல் மேகம்
பால் மழை பொழியும்.
சரியாக 5. 5க்கு காபி டிக்காசன், அதைத் தொடர்ந்து தேனீர் டிக்காசன்
மூன்று நிமிடங்கள். பின் பத்து நிமிடங்களுக்கு
தண்ணீர் மழை பொழியும்! அதிகாலைச் சுடு பானம் அருந்துபவர்கள்
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். சந்தர்ப்பத்தை தவறவிட்டவர்கள்
மீண்டும் 6.15க்கு இரண்டு மணி வேகத்தில் காற்று வீசாமல் பால்மழை பொழியும்!
6.20க்கு காபி டிக்காசன், 6.25க்கு தேனீர் டிக்காசன் 6.29க்கு
வடை மழை, தொடர்ந்து இட்லி, தோசை கலந்தும்
தனித்தனியாகவும் 6.33 வரையில் பெய்யும்.
6.40லிருந்து 6.50 வரை தண்ணீர் மழை மணிக்கு முப்பது மைல்
வேகத்தில் பொழியும். இந்த நேரங்களில் யாரும் வீட்டுக்கு வெளியே
வரவேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.
அடுத்த வானிலை அறிவிப்பு வரை, " வானமே வாழ்க " திரைப்
படத்திலிருந்து ஒரு பாடலை நேயர்கள் கேட்டு மகிழலாம், " என்று
அறிவிப்பு வரும்.
ஆதே போல மதியம், மாலை, இரவு உணவு என்ன? சைவ,
அசைவ உணவுகள், இன்றைய ஸ்பெஷல் போன்ற
அறிவிப்புகள் இடம் பெறும். வெயில் நேரங்களில் அவ்வப்போது சூப்,
ஜூஸ் வகைகள் பொழிவதும் உண்டு.
இன்னும் பொழியும்.....!

0 Comments:
Post a Comment
<< Home