உணவு மழைத் தீவு : 10 :
உணவு மழைத் தீவு அடுத்த சில தினங்களில்
வழக்கமான தீவாக மாறியிருந்தது. தீவு மக்களும்
குழந்தைகளும் உற்சாகமாக உலா வந்தனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட உணவு
மழைப் புயல் ஓய்ந்து உற்சாகமாக கடற்கரை
யோரங்களில் கூடி சந்தோசப் பொழுதுகளில் மூழ்கினர்.
உணவு மழைத் தீவில் அடுத்த மூன்று நாட்கள்
நன்றி நவிலல் விழா!
ஒவ்வொரு வருடமும் தங்களின் மூவேளை உணவை
எந்தக் கட்டணமும் இல்லாமல் வழங்கும்
வானத்திற்கு நன்றி கூறும் விழா!
வானதேவனுக்கான விழாவாக வானம் பார்த்து
முதல் நாள் விழா! மூன்று வேளையும்தங்கள்
உணவோடு தீவுத்திடலில் தீவு மக்கள்
அனைவரும் கூடி பாட்டுப்பாடி வானதேவனுக்கு
வணக்கம் செய்து உணவுண்பது வழக்கம்!
இந்த வருடமும் தீவு மக்கள் கூடிக் கொண்டாடினர்.
இரண்டாவது நாள் தீவு மக்கள் அனைவரும் கடற்
கரையில் கூடி பல்வேறு விளையாட்டு, படகு
செலுத்தும் போட்டி என்று அமர்க்களமாகக் கொண்டாடினர்.
மூன்றாவது நாள் குழந்தைகளை முன்னிலைப்படுத்தி
அவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தி
பரிசுகளை தீவின் மையத் திடலில் வழங்கினர்.
தீவின் நிர்வாக அதிகாரி தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி
நடந்தது.
தீவு நிர்வாக அதிகாரி ஒலிபெருக்கியில் புதிய நிர்வாக
அதிகாரியாக வர விரும்புபவர்கள்மேடைக்கு வரும்படி
கேட்டுக்கொள்கிறேன் என்று அறிவித்தார்.
நான் நீ என்று போட்டியிட ஒருவரும் இல்லை.
ஒரே ஒருவர் மட்டும் மேடை ஏறி,"நான் தீவு நிர்வாக
அதிகாரியாக வர விரும்புகிறேன்" என்றார்.
யாருக்காவது ஆட்சேபனை உண்டா? என்று பழைய
நிர்வாக அதிகாரி கேட்க, கூட்டம் இல்லையென்றது.
உடனே அவர் நாளை முதல் தீவின் நிர்வாக
அதிகாரியாக பதவி ஏற்பார் என்றார்.
தீவு மக்கள் தங்கள் இரவு உணவைச் சுவைத்துக்கொண்டே தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மூழ்கியிருந்தனர். திடீரென்று திரையில் சிவப்பு எழுத்துக்களில் அபாய அறிவிப்பு என்று வந்தபோது சாப்பிடுவதை நிறுத்திவிட்டு எல்லோரின் கண்களும்
இன்னும் பொழியும்....!