உணவு மழைத் தீவு - :9 :
<>உணவு மழைத் தீவு<>
அதிகாலையில் போர்வைகளுக்குள் முடங்கிக்கிடந்த உணவுமழைத்தீவு மக்களுக்கு அந்தத் தீவின் அபாயச்
சங்கொலி ஊதுவது கேட்டது. எல்லோரும் என்னமோ ஏதோவென்று பதறியடித்து எழுந்தனர். வீதிகளில் ஒலிபெருக்கியில் பேசும் சத்தம் கேட்டது.
அதிகாலையிலிருந்து கடும் புயல் வீசப் போவதால் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம். இடியாப்ப புயல் வீசும்போது இடியாப்பம் சிறிதாகவோ பெரிதாகவோ வந்து விழுந்து பூமியைத் தாக்கக்கூடும். எனவே மக்கள் தாங்கள் சேகரித்துவைத்துள்ள உணவுப்பொருட்களுடன் பாதாள அறைகளில் தங்கியிருக்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். மறு அறிவிப்புவரும்வரை பொதுமக்கள் தங்கள் பாதாள அறைகளைவிட்டு வெளியே வராமலிருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று அறிவித்துக்கொண்டு போனார்கள்.
அதற்குள்ளாகவா என்று பெரியவர்கள் கவலையில் ஆழ்ந்தனர். எல்லோரும் உணவுப்பொருட்கள், தேவையான பொருட்களுடன் பாதாள அறைகளுக்குள் சென்றனர். பொழுது விடியும் முன்பே, காற்றின் பேரிரைச்சல் கேட்டது. தொலைக்காட்சியில் வெளியே நடக்கும் காட்சிகளைப் பார்த்தனர். இடியாப்பம் ஒரு பேருந்துச் சக்கரம் அளவு பெரியதாக வந்து விழுந்துகொண்டிருந்தது.
இப்போதுதான் வீட்டு மேற்கூரைகள் சேதமாகி மாற்றினோம்.
மடமடவென்று வீடுகள் நொறுங்கி விழும் சத்தம்...இப்படியாக அதிகாலை அதிபயங்கரமான காலையாக மாறியிருந்தது.
வேற்று கிரகத்திலிருந்து பறந்துவரும் பறக்கும் தட்டுகள் போன்று வானத்திலிருந்து பூமியை நோக்கி இடியாப்பங்கள் வந்தவண்ணமிருந்தது!
காபி ஆவி பறக்க வந்தது. ஒரு புகை மண்டலம் போல வெளியே காட்சி தருவதை தொலைக்காட்சியில் கண்டு மக்கள் பயந்தனர். சிறுவர் சிறுமியர் பயந்து நடுங்கியவாறு பார்த்துக்கொண்டிருந்தனர்.
ஒருவாறாக இடியாப்ப புயல் தன் சினத்தைக் குறைக்கும்போது மாலை மங்கத் தொடங்கியிருந்தது. உணவுமழைத்தீவு நகரியம் தன் படைபரிவாரங்களோடு உணவுப்பொருட்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். வீடுதவறாமல் சேதம் மிகுந்து காணப்பட்டது. இடியாப்ப புயல் சேதங்களைச் சரிசெய்ய நான்கு நாட்கள் உணவுமழைத்தீவு மக்களுக்கும் தீவு அலுவலர்களுக்கும் தேவைப்பட்டது. இடியாப்பங்கள் ஒருவரால் தூக்க இயலாத அளவு பெரிதாக இருந்தது. இவற்றையெல்லாம் சேகரித்து ஒரு பகுதியை கடலில் மீன்கள், ஆமைகள், திமிங்கிலங்களுக்கு உணவாகப் போட்டனர். மீதியை உணவு மழைத் தீவு குப்பைக் கிடங்கில் போட்டு மூடினர்.
ஒருநாள் காய்கறி சூப்பாகவே பெய்தது! இன்னொருநாள் கோழிக்கறியும்,சுக்கா வறுவலுமாக பொழிந்து தள்ளியது! மற்றொருநாள், ரொட்டியும் வெண்ணெயுமாக வந்து விழுந்தது. அடுத்தநாள் பாசிப்பருப்பு பாயாசமாய் பொழிய அன்று அதையே வயிறு நிறையச் சாப்பிட்டு குழந்தைகளுக்கு வயிற்றுவலி என்றானது. ஒருநாள் பாலில்லாமல் வரக்காப்பியாகப் பெய்து காபி பிரியர்களை கவலைப்படுத்தியது. சந்தோசமாக உணவு மழைத் தீவு மக்கள் வாழ்க்கை நகர்ந்தாலும் புயல், திடீர் பேரளவு உணவுமழைகளால் சில நேரங்களில் வாழ்க்கை கசந்து போகிறது. அப்படிக் கசந்துபோகிறநாளும் வந்தது!
இன்னும் பொழியும்....!