உணவு மழைத் தீவு :18:
கப்பல் தலைவர் "ஆனால் என்று சொல்லி நிறுத்தியதும் உணவு மழைத்தீவினர் புருவங்கள் உயர...... இயலாது என்று ஏதும் சொல்லிவிடுவாரோ என்ற அச்சம் மேலோங்க அவரையே பார்த்தவண்ணமிருந்தனர்.
கப்பல் தலைவரோ, "இது வான் தீவுக்குச் சொந்தமான கப்பல். வான் தீவு நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் நான் உங்களை ஏற்றிச்செல்ல இயலாது. ஆனால் உங்கள் சூழ்நிலையைச் சொல்லி அவர்களுடைய அனுமதி பெற முடியும் என்று நினைக்கிறேன்.
எனவே கப்பலுக்குச் சென்று அதிகாரிகளின் அனுமதி பெற்றுக் கொண்டு வருகிறேன். அவர்கள் அனுமதி மறுக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எனவே கவலையற்க. நான் சென்று பேசி வருகிறேன்" என்று சொன்னார்.
"ரெம்ப நன்றி...ரெம்ப நன்றி.." என்று ஒரே நேரத்தில் உணவுமழைத் தீவினர் சொன்னார்கள்.
கப்பல் தலைவரும் அவருடன் வந்தவர்களும் கப்பலுக்கு கிளம்பிச் சென்றனர்.
அவர்கள் சென்றதும் உணவுமழைத்தீவினர் உற்சாகத்தோடு பேசிக்கொண்டனர்.
கப்பல் தலைவர் மிக நல்லவராக இருக்கிறார். கண்டிப்பாக அனுமதி வாங்கி வந்துவிடுவார் என்றும்
நம் நல்ல நேரம் இந்தக் கப்பல் நம் தீவு மக்கள் கவலை நீக்கவே வந்தது என்றும் சொல்லிக்கொண்டனர்.
ஒருமணி நேரம் கழித்து கப்பல் தலைவரும் மற்றவர்களும் திரும்பி வந்தனர்.
தீவு அதிகாரி,"நல்லசெய்தியோடு வந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்,"என்றார் கப்பல் தலைவரைப் பார்த்து!
"ஆமாம். உங்களுக்கு நல்ல செய்திதான். எங்கள் தீவு உயர் அதிகாரிகள்
அனுமதியளித்து விட்டனர். ஒரே சமயத்தில் மூவாயிரம் பேர்கள் வசதியாக எங்கள் கப்பலில் பயணம் செய்யலாம். கொஞ்சம் அசவுகரியக் குறைவு இருந்தாலும் பரவாயில்லை என்று நீங்கள் நினைத்தால் 4000பேர்களை ஏற்றிச்செல்ல முடியும்," என்றார் கப்பல் தலைவர்.
"அப்படியானால் எங்களிடம் இருக்கும் படகுகளில் மீதமுள்ளவர்களை ஏற்றிக் கொள்ள முடியும். உங்கள் உதவியை எங்கள் தீவு மக்கள் தங்கள் உயிர் உள்ளவரை மறக்கமாட்டார்கள்; எங்கள் எல்லோரின் சார்பிலும் உங்களுக்கும் உங்கள் தீவு அதிகாரிகளுக்கும் எங்கள் நன்றிகள்," என்றார் தீவு நிர்வாகி.
கப்பலுடன் தீவு நிர்வாகியும் மற்றவர்களும் உணவு மழைத் தீவை நோக்கி பயணப்பட்டார்கள்.
இன்னும் பொழியும்...!
Labels: children, children's story, story